ETV Bharat / crime

ரெய்டுக்கு பயந்து பணத்தை எரித்த இடைத்தரகர்!

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு பயந்து, தெலங்கானாவைச் சேர்ந்த இடைத்தரகர் பணத்தை அடுப்பில் வைத்து எரித்துள்ளார். மொத்தம் 70 விழுக்காடு பணம் எரிந்த நிலையில், அலுவலர்கள் அதனை மீட்டு, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

author img

By

Published : Apr 7, 2021, 6:31 PM IST

Man burns money in Hyderabad
Man burns money in Hyderabad

ஹைதராபாத் (தெலங்கானா): பல லட்சக்கணக்கான பணத்தை ஊழல் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு பயந்து இடைத்தரகர் ஒருவர் எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோலெந்தகுந்தா தண்டா சர்பஞ்ச் ராமுலு என்பவர் வெல்டாண்டா மண்டல் பொல்லம்பள்ளியில் ஒரு ஆலையை நடத்த சுரங்கத் துறையிடம் அனுமதி கோரியிருந்தார். இதுதொடர்பாக வெல்தாண்டா தாசில்தாரைச் சந்தித்தபோது, இந்தக் காரியத்தை செய்ய, கல்வகூர்த்தி நகரில் வசிக்கும் வெங்கடையா கெளட் ராமுலு என்பவரை சந்திக்க பரிந்துரைத்துள்ளார்.

Man burns money on gas stove as ACB raids his house
எரிக்கப்பட்ட பணம்

பணிகளை முடிக்க ராமுலுவிடம் ரூ.6 லட்சம் கெளட் கேட்டுள்ளார். இறுதியாக ஒப்பந்தம் ரூ.5 லட்சத்திற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. இதற்கிடையில், ராமுலு இந்த வழக்கை ஊழல் தடுப்பு பிரிவின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார். அவர்கள் ஆலோசனையின் அடிப்படையில், ராமுலு கெளட்டின் வீட்டிற்குச் சென்று பணத்தை கொடுத்துள்ளார். இந்த திட்டத்தை வடிவமைத்த அலுவலர்கள் அடுத்த சில மணிநேரங்களில் கெளட்டின் வீட்டில் அதிரடி சோதனை நடத்த சென்றனர்.

ஆனால், அவர் கதவைத் திறக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கதவை உடைத்து உள்ளே சென்ற அலுவலர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், தான் வாங்கிய பணத்தை கேஸ் அடுப்பின் மேல் வைத்து எரித்துள்ளார். அதனை அலுவலர்கள் மீட்டபோது, 70 விழுக்காடு அளவு பணம் எரிந்த நிலையில் இருந்துள்ளது. அனைத்தையும் கைபற்றிய ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள், இவருக்குச் சொந்தமான மேலும் பல இடங்களின் சோதனை நடத்தி வருகின்றனர்.

ரெய்டுக்கு பயந்து பணத்தை எரித்த இடைத்தரகர்

அலுவலர்களுக்கு பயந்து லட்சக்கணக்கான பணத்தை எரித்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹைதராபாத் (தெலங்கானா): பல லட்சக்கணக்கான பணத்தை ஊழல் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு பயந்து இடைத்தரகர் ஒருவர் எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோலெந்தகுந்தா தண்டா சர்பஞ்ச் ராமுலு என்பவர் வெல்டாண்டா மண்டல் பொல்லம்பள்ளியில் ஒரு ஆலையை நடத்த சுரங்கத் துறையிடம் அனுமதி கோரியிருந்தார். இதுதொடர்பாக வெல்தாண்டா தாசில்தாரைச் சந்தித்தபோது, இந்தக் காரியத்தை செய்ய, கல்வகூர்த்தி நகரில் வசிக்கும் வெங்கடையா கெளட் ராமுலு என்பவரை சந்திக்க பரிந்துரைத்துள்ளார்.

Man burns money on gas stove as ACB raids his house
எரிக்கப்பட்ட பணம்

பணிகளை முடிக்க ராமுலுவிடம் ரூ.6 லட்சம் கெளட் கேட்டுள்ளார். இறுதியாக ஒப்பந்தம் ரூ.5 லட்சத்திற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. இதற்கிடையில், ராமுலு இந்த வழக்கை ஊழல் தடுப்பு பிரிவின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார். அவர்கள் ஆலோசனையின் அடிப்படையில், ராமுலு கெளட்டின் வீட்டிற்குச் சென்று பணத்தை கொடுத்துள்ளார். இந்த திட்டத்தை வடிவமைத்த அலுவலர்கள் அடுத்த சில மணிநேரங்களில் கெளட்டின் வீட்டில் அதிரடி சோதனை நடத்த சென்றனர்.

ஆனால், அவர் கதவைத் திறக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கதவை உடைத்து உள்ளே சென்ற அலுவலர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், தான் வாங்கிய பணத்தை கேஸ் அடுப்பின் மேல் வைத்து எரித்துள்ளார். அதனை அலுவலர்கள் மீட்டபோது, 70 விழுக்காடு அளவு பணம் எரிந்த நிலையில் இருந்துள்ளது. அனைத்தையும் கைபற்றிய ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள், இவருக்குச் சொந்தமான மேலும் பல இடங்களின் சோதனை நடத்தி வருகின்றனர்.

ரெய்டுக்கு பயந்து பணத்தை எரித்த இடைத்தரகர்

அலுவலர்களுக்கு பயந்து லட்சக்கணக்கான பணத்தை எரித்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.